"முதலில், கிருஷ்ணரின் பக்தராக முயலுங்கள். பின்னர் பகவத் கீதை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள முயலுங்கள்-பாண்டித்தியத்தாலோ அல்லது மன கற்பனையாலோ அல்ல. பின்னர் பகவத் கீதையை என்றுமே புரிந்து கொள்ள முடியாது. பகவத் கீதையை புரிந்துகொள்ள வேண்டுமெனில் பகவத்கீதையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றி புரிந்து கொள்ள வேண்டும், உங்கள் சொந்த மனக்கற்பனையால் அன்று. இதுவே புரிந்து கொள்ளும் வழிமுறை. பக்தோ (அ)ஸி மே ஸகா சேதி (BG 4.3). பக்தன் என்றால்... யார் பக்தன்? பக்தன் என்றால் இறைவனுடனான தனது நித்திய உறவை புதுப்பித்துக் கொண்டவன்."
|