"நாம் கவனமாக கேட்டால், பிறகு தியானம் செய்ய வேண்டும். மேலும் பூஜை செய்ய வேண்டும். பூஜை என்றால் வணங்குதல். இந்த யுகத்தில் வணங்குவதிற்கு எளிமையான செயல்முறை நாம் செய்துக் கொண்டிருப்பது - ஜெபித்தில், கேட்பது, மேலும் கொஞ்சம் பழங்கள், பூக்கள், காணிக்கை அளிப்பது, அத்துடன் இந்த தீபம் காட்டுவது. இது சுலபமானது, அவ்வளவுதான். வேத இலக்கியத்தின்படி இன்னும் பல முறைகள்..., வணங்குவதற்கு அறுபத்திநான்கு விதம் உள்ளது. இந்த யுகத்தில் அது சாத்தியப்படாது. எனவே இது போதுமானது. இந்த செயல்முறை உங்களுக்கு பூரண பரம உண்மையை புரிந்துக் கொள்ள வாய்ப்பளிக்கும். நீங்கள் இந்த செயல்முறையை பின்பற்றுங்கள் ஏகேன மனஸா, ஓரே நோக்கத்துடன், உங்கள் கவனத்தை வேறு எந்த செயலிலும் திருப்பாமல். இந்த செயல்முறையை பின்பற்றினால், ஏகேன மனஸா, கேட்பதற்கு, ஜெபிப்பதிற்கு, அவரை நினைப்பதற்கும் மேலும் வணங்குவதற்கும்... இந்த எளியமுறை. இதுதான் ஸ்ரீமத் பாகவதத்தின் ஆணை."
|