TA/680315b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"சாணக்ய பண்டித கூறுகிறார் அதாவது 'நேரம் மிகவும் விலையுயர்ந்தது நீங்கள் இலட்சக் கணக்கில் தங்க நாணயங்கள் கொடுத்தாலும், ஒரு நொடியை கூட திரும்ப பெற முடியாது'. தொலைந்தது இறுதிவரை தொலைந்ததுதான். ந சேன் நிரர்தகம்ʼ நீதி꞉ 'அத்தகைய மதிப்புமிக்க நேரம் ஆதாயமில்லாமல் வீனாகினால், ச ந ஹாநிஸ் ததோ அதிகா, எத்தகை இழப்பு, எவ்வளவு பெரிய ஏமாளியாவீர்கள் என்று கர்பனை செய்து பாருங்கள்'. இலட்சம் வெள்ளி கொடுத்தாலும் திரும்ப பெற முடியாத விஷயம், அது ஒரு பயனுமில்லாமல் தொலைந்தால், நீங்கள் எத்தகைய இழப்பை ஏற்கிறீர்கள், கற்பனை செய்து பாருங்கள். ஆக அதே விஷயத்தை: ப்ரஹ்லாத மஹாராஜ கூறுகிறார் அதாவது தர்மான் பாகவதன், கிருஷ்ண பக்தனாக, அல்லது பகவான் பக்தனாக மாறுவது மிகவும் முக்கியமனது, நாம் ஒரு நொடிகூட இழக்க கூடாது. உடனடியாக நாம் ஆரம்பிக்க வேண்டும். ஏன்? துர்லபம்ʼ மானுஷம்ʼ ஜன்ம. மானுஷம்ʼ ஜன்ம (ஸ்ரீ.பா. 7.6.1). இந்த மனித பிறவி மிகவும் அரிதானது. இதை பல பிறவிகளுக்கு பிறகு நாம் பெற்றிருக்கிறோம். எனவே நவநாகரீகம், அவர்கள் மனிதபிறவியின் மதிப்பைப் பற்றி புரிந்துக் கொள்ளவில்லை."
680315 - சொற்பொழிவு SB 07.06.01 - சான் பிரான்சிஸ்கோ