TA/740928 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாயாப்பூர் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் கிருஷ்ணரை புரிந்துக் கொள்ளவில்லை என்றால், பிறகு நீங்கள் வேதம் மேலும் வேதாந்தங்கள் மற்றும் உபநிஷத்ஸ் படிப்பது பயனற்றது, அவை நேர விரயம். எனவே இங்கே குந்தி நேரடியாக கூறுகிறார் அதாவது 'என் அன்பான கிருஷ்ணா, நீங்கள் ஆத்யம்ʼ புருஷம், நீங்கள் மூலமானவர். மேலும் ஈஶ்வரம். நீங்கள் சாதாரணமானவர் அல்ல. நீங்கள் பூரணமாக கட்டுப்படுத்துபவர்' (SB 1.8.18). அதுதான் கிருஷ்ணரை புரிந்துக் கொண்டவர். ஈஶ்வர꞉ பரம꞉ க்ருʼஷ்ண꞉ (Bs. 5.1). அனைவரும் கட்டுப்படுத்துபவர், ஆனால் பூரணமாக கட்டுப்படுத்துபவர் கிருஷ்ணராவார். எனவே இந்த பௌதிக உலகம் தண்டிப்பதற்குகந்த இடமானலும்—து꞉காலயம் அஶாஶ்வதம் (BG 8.15), கிருஷ்ணர் கூறுகிறார்—இதுவும் கிருஷ்ணரின் இராச்சியம், ஏனென்றால் அனைத்தும் பகவானுக்கு, கிருஷ்ணருக்குச் சொந்தமானது. எனவே இந்த தண்டிப்பதற்குகந்த இடம், தண்டிக்கப்பட வேண்டிய நபருக்காக படைக்கப்பட்டது. யார் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்? கிருஷ்ணரை மறந்துவிட்டு மேலும் சுதந்திரமாக சந்தோஷம் அடைய விரும்புபவர்கள், அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டிய அசுரர்கள். மேலும் கிருஷ்ணரிடம் சரணடைந்துவிட்டவர்கள், அவர்கள் தண்டிக்கப்படமட்டார்கள். இதுதான் வித்தியாசம்."
740928 - சொற்பொழிவு SB 01.08.18 - மாயாப்பூர்