TA/Prabhupada 0204 - என் குருவின் கருணை எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதுதான் வாணீ



Morning Walk -- July 21, 1975, San Francisco

பிரபுபாதர்: நீங்கள் இரண்டிலும் இணைக்கப்பட வேண்டும். குரு-க்ருஷ்ண-க்ருபாய பாய பக்தி-லதா-பீஜா (ஸி.ஸி.மத்திய 19.151). இருவரும், குருவின் க்ருபா மேலும் க்ருஷ்ணரின் க்ருபா, அவை இணைந்திருக்க வேண்டும். பிறகு நீங்கள் பெறுவீர்கள்.

ஜெயாட்வைத: அந்த குரு க்ருபா பெறுவதற்கு நாங்கள் மிகவும் ஆர்வமுடன் இருக்கிறோம்.

பிரபுபாதர்: யார்?

ஜெயாட்வைத: நாங்கள் அனைவரும்.

பிரபுபாதர்: ஆம். யஸ்ய ப்ரஸாதாத் பகவத்-ப்ரஸாதோ. உங்களுக்கு குருவின் க்ருபா கிடைத்தால், பிறகு தன்னியக்கமாக நீங்கள் கிருஷ்ணருடையதும் பெறுவீர்கள்.

நாராயண: ஸ்ரீலா பிரபுபாத குரு-க்ருபா, ஆன்மீக குருவை திருப்திபடுத்துவதன் மூலம் மட்டும்தான் வருமா?

பிரபுபாதர்: மற்றபடி எவ்வாறு?

நாராயண: என்னை மன்னிக்கவும்?

பிரபுபாதர்: மற்றபடிஅது எவ்வாறு நடக்கும்?

நாராயண: ஆகையால் தங்களை காணவும் அல்லது பேசவும் வாய்ப்பு இல்லாத சீடர்கள்...,

பிரபுபாதர்: அதை பற்றி அவர் பேசிக் கொண்டிருந்தார், வாணீயும் வபுவும். நீங்கள் அவர் உடலை பார்க்காவிட்டாலும், நீங்கள் அவர் வார்த்தைகளை கேட்டுக் கொள்ளுங்கள், வாணீ.

நாராயண: ஆனால் அவர்கள் தங்களை திருப்திபடுத்துகிறார்கள் என்பதை எவ்வாறு அறிவார்கள், ஸ்ரீலா பிரபுபதா?

பிரபுபாதர்: நீங்கள் உண்மையிலேயே குருவின் வார்த்தைகளை பின்பற்றினால், பிறகு அவர் திருப்தி அடைந்தார் என்று பொருள்படும். மேலும் நீங்கள் பின்பற்றவில்லை என்றால், அவர் எவ்வாறு திருப்தி கொள்வார்?

சுதாமா: அதுமட்டுமல்ல, ஆனால் தங்களுடைய கருணை எங்கும் பரவியுள்ளது, நாங்கள் அதை சாதகமாகிக் கொண்டால், தாங்கள் ஒரு முறை கூறியுள்ளீற்கள், பிறகு அதன் பலனை நாங்கள் உணர்வோம்.

பிரபுபாதர்: ஆம்.

ஜெயாட்வைத: குரு கூறுவதில் எங்களுக்கு நம்பிக்கை இருந்தால், பிறகு தன்னியக்கமாக நாங்கள் அதைச் செய்வோம்.

பிரபுபாதர்: ஆம். என் குரு மஹாராஜ் 1936-ல் மறைந்தார், நான் இந்த இயக்கத்தை 1965-ல் ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்கு பிறகு. பிறகு? என் குருவின் கருணை எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதுதான் வாணீ. குரு உடம்பால் இல்லை என்றாலும், நீங்கள் வாணியை பின்பற்றினால், பிறகு உங்களுக்கு ஆதரவு கிடைத்துக் கொண்டிருக்கும்.

சுதாமா: ஆகையால் சீடர்கள் குருவின் அறிவுரைகளை பின்பற்றும்வரை அங்கே பிரிவினை என்னும் கேள்விக்கு எப்போதும் இடமேயில்லை.

பிரபுபாதர்: இல்லை. சக்கு-தான் திலொ ஜெய்.... அதற்கு அடுத்தது என்னது?

சுதாமா: சக்கு-தான் திலொ ஜெய், ஜென்ம ஜென்ம பிரபு செய்.

பிரபுபாதர்: ஜென்ம ஜென்ம பிரபு செய். ஆகையால் பிரிவினை அங்கு ஏது? உங்கள் கண்களை திறந்துவிட்டவரே, ஒவ்வொரு பிறவியிலும் அவரே உங்கள் பிரபு.

பரமஹம்ஸ: தங்கள் ஆன்மீக குருவின் ஆழ்ந்த பிரிவினை எதையும் தாங்கள் உணர்வதில்லையா?

பிரபுபாதர்: அதைப் பற்றி நீங்கள் கேள்வி கேட்க தேவையில்லை.