TA/Prabhupada 0327 - உயிர் வாழும் ஜீவன், உடலுக்குள்ளே இருக்கின்றது, ஸ்தூல மற்றும் சூட்சும உடலுக்குள்



Room Conversation -- April 20, 1976, Melbourne


கேரல் ஜார்விஸ்: புத்தகங்களின் விற்பனையால் பல ஆயிரம் டாலர்கள் சம்பாதிப்பதாக தாங்கள் முன்பே கூறினீர்கள். ‌


பிரபுபாதர்: ஆம்.


கேரல் ஜார்விஸ்: தங்கள்து சிந்தனையை மற்றோருடன் பகிர்ந்துகொள்வது தான் உங்கள் நோக்கம் என்றால், எதற்காக புத்தகங்களை விற்று பணம் சம்பாதிக்கிறீர்கள் ? ‌


பிரபுபாதர்: இல்லையெனில் நீங்கள் இதை படிக்க மாட்டீர்கள். நான் இலவசமாக அளித்தால், நீங்கள், "ஓ, இவை ஏதோ பயனற்றவை. இவர்கள் இலவசமாக வழங்குகிறார்கள்." என்று நினைக்கலாம்.


கேரல் ஜார்விஸ்: இலவசமாக தரவேண்டாம், உற்பத்திக்கான தொகைக்கு மற்றுமே விற்கலாமே. ‌


பிரபுபாதர்: ஆகையால் அவர் எப்பொழுது விலைக்கு வாங்குவாரோ ... அவர் பார்க் முயற்சி செய்வார்கள் "இந்த நூல்கள் என்ன சொல்கின்றன ? பார்க்கட்டும்." என. மறுபுறம் இலவசமாக கிடைத்தால், இதை நூறு வருடங்கள் நீங்கள் அலமாரியிலேயே வைத்திருப்பீர்கள். அதனால் தான்.... இறுதியில், இப்புத்தகங்களை அச்சடித்தாகவேண்டும், அதற்கு யார் காசு தருவது ? எங்களிடம் பணமே கிடையாது.


கேரல் ஜார்விஸ்: சரி, வீதிகளில் சம்பாதித்த மிச்ச பணத்தின் கதி என்ன? ‌


பிரபுபாதர்: எங்கள் இயக்கத்தை நாங்கள் அதிகரிக்கின்றோம். புதிய மையங்களை திறந்து வருகின்றோம். அதிகமாக புத்தகங்களை அச்சடிக்கின்றோம். இவை என் புத்தகங்கள். பக்திவேதாந்த புக் டிரஸ்ட் ஒன்றை அமைத்திருக்கிறேன். அது தான் என் விருப்பம், மேலும் வசூலில் ஐம்பது சதவீதம், புத்தகங்களை அச்சடிப்பதற்காக செலவு செய்ய வேண்டும் மிச்ச ஐம்பது சதவீதம் இயக்கத்தை பரப்புவதற்கு செலவு செய்ய வேண்டும். ஆகையால் இலாபத்திற்க்கு இடமேயில்லை.


கேரல் ஜார்விஸ்: கடைசியில் தாங்கள் போதிக்க விரும்புவது ஏதாவது உள்ளதா என நான் கேட்கலாமா ? ‌


பிரபுபாதர்: ஆம், மக்கள், இந்த உடல் தான் நான் என்ற உணர்வில் இருக்கிறார்கள், ஆனால் அது உண்மை அல்ல. ஆன்மா, அல்லது அசல் மனிதன், அவன் உடலுக்குள்ளே இருக்கின்றான். நீ இந்த சட்டையோ கோட்டோ அல்ல, அது போல் தான். நீ சட்டை கோட்டுக்குள்ளே இருப்பவன். அதுபோலவே, உயிர் வாழும் ஜீவன், உடலுக்குள்ளே இருக்கின்றது, ஸ்தூல மற்றும் சூட்சும உடலுக்குள். சூட்சும உடல் என்பது மனம், புத்தி மற்றும் அகங்காரத்தினால் ஆனது, மேலும் ஸ்தூல உடல் என்பது ஜட வஷயங்களின் இணைப்பினால் ஆனது, நிலம், நீர், காற்று, நெருப்பு, இவ்வாறாக ஐந்து மூலகங்கள். மொத்தத்தில் எட்டு மூலகங்கள். இது தான் கீழ்ச் சக்தி. மேல்நிலை சக்தி இந்த எட்டு மூலகங்களுக்குள்ளே உள்ளது, ஐந்து ஜடமானவை மற்றும் மூன்று சூட்சுமமானவை. ஆகையால் நாம் அந்த கல்வியை கற்க வேண்டும். அந்த பையனுக்கு கேள்வி மூலமாக கற்ப்பித்தேன், "ஆகாயத்தில் பறக்கும் மிகப் பெரிய 747 விமானத்தை உன்னால் உருவாக்க முடியும், ஆனால் விமானத்தை ஒட்டுபவனையும் உன்னால் புனைந்து உருவாக்க முடியுமா?"