TA/Prabhupada 0753 - பெரிய நபர்கள், நம் புத்தகங்களின் தொகுப்பு ஒன்றை வாங்கிப் படிக்கட்டும்



Room Conversation -- May 4, 1976, Honolulu

பிரபுபாகர்: ஆக இந்த எல்லா பெரிய பெரிய நபர்கள், நம் புத்தகங்களின் தொகுப்பு ஒன்றை வாங்கிப் படிக்கட்டும். அவர்களுக்கு அது ஒரு பெரிய செலவொன்றும் கிடையாது, ஆனால் தன் ஓய்வு நேரத்தில் சில வரிகளை படித்தால் - அவர்கள் அறிவாளிகள் - இந்த கிருஷ்ண உணர்வென்றால் என்னவென்று அவர்கள் சிந்திப்பார்கள். ஆக உன் தந்தையின் செல்வாக்கால், இந்த பெரிய நபர்களுக்கு நமது புத்தகங்களை அறிமுகப்படுத்த முயற்சி செய். அவர்கள் அதை தன் நூலகத்தில் வைத்திருக்கலாம், பிறகு ஓய்வு நேரத்தில், வெறும் ஒரு வரியின் மேல் பார்வை இட்டால், ஓ , அது பெரிய விஷயம்...


த்ருஷ்டத்யும்னன்: பிறகு அவர் பிள்ளைகளும் அதை படிப்பார்கள்.


பிரபுபாகர்: அவர் பிள்ளைகளும் அதை படிப்பார்கள்.


த்ருஷ்டத்யும்னன்: ஏற்கனவே என் தந்தை தனது பயணங்களில் கவனித்திறுக்கிறார், அவருடைய சில தோழர்களின், பிள்ளைகளும் நம் இயக்கத்தில் சேர்ந்திருக்கிறார்.


பிரபுபாதர்: யத் யத் ஆசரதி ஷ்ரேஷ்ட:லோகஸ் தத்அனுவர்ததே (BG 3.21)

உலகத்தின் இந்த பெரிய நபர்கள் இவையை ஏற்றுக்கொண்டால், "ஓ, ஆமாம். இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் உண்மையானது," பிறகு இயல்பாகவே மற்றோரும் இதை பின்பற்றுவார்கள். ஆக உலகத்தின் புகழ்பெற்ற நபர்களுடன் தொடர்பு கொள்ள இது நல்ல சந்தர்ப்பம். ஆக அதை நன்றாக பயன்படுத்துங்கள். நீங்கள்... நீங்கள் இருவரும் புத்திசாலிகள். மெகு கவனமாக அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் புரிந்துக் கொள்வார்கள் "ஓ, இவர்கள் மிக நேர்மையானவர்கள், குணசாலிகள், மற்றும் மேம்பட்ட கல்வியும் கடவுள் உணர்வையும் பெற்றவர்கள்." அது நம் இயக்கத்தை வெற்றிகரமாக ஆக்கச் செய்யும்