TA/Prabhupada 0121 - இறுதியில் கிருஷ்ணர் வேலை செய்துக் கொண்டிருக்கிறார்



Morning Walk At Cheviot Hills Golf Course -- May 17, 1973, Los Angeles

கிருஷ்ண-காந்தீ: மனித மூளை எவ்வளவு சிக்கலான நுணுக்கங்களை கொண்டது என்பதை நினைத்து, மருத்துவர்கள் ஆச்சர்யப்படுகின்றனர். பிரபுபாதர்: ஆம். ஆம். கிருஷ்ண-காந்தீ: அவர்கள் வியந்துபோகிறார்ர்கல். பிரபுபாதர்: ஆனால் அவர்கள் அயோக்கியர்கள். செயல்களுக்கான மூல காரணம் மூளை அல்ல. வாஸ்தவத்தில் செயல்படுவது அந்த ஆன்மா தான். அதே தான்: ஒரு கம்ப்யூட்டர் போல் தான். அந்த கம்ப்யூட்டர் தானாகவே செயல்படுகிறது என்று ஒரு அயோக்கியனால் தான் கூறமுடியும். இல்லை. அந்த மனிதன் அதை செயல்புரிய வைக்கிறான். அவன் பட்டனை தட்டுகிறான், அது வேலை செய்கிறது. மற்றபடி, அந்த இயந்திரம் இருந்து என்ன பிரயோஜனம் ? நீங்கள் அந்த இயந்திரத்தை ஆயிரம் வருடங்களுக்கு வைத்திருங்கள், அது வேலை செய்யாது. ஒருவன் வந்து, பட்டனை அழுத்தினால், பிறகு அது வேலை செய்யும். ஆக வாஸ்தவத்தில் யார் வேலை செய்துக் கொண்டிருக்கிறார்? இயந்திரம் வேலை செய்கிறதா அல்லது மனிதன் வேலை செய்கிறானா? மேலும் அந்த மனிதனும் ஒரு இயந்திரம் தான். உடல் என்கிற அந்த இயந்திரம், பரமாத்மா, அதாவது கடவுள் அதில் இருப்பதால் தான் செயல்படுகிறது. ஆக, இறுதியில், கடவுள் தான் வேலை செய்கிறார். ஒரு இறந்த மனிதனால் வேலை செய்ய முடியாது. ஆக ஒரு மனிதனால் எத்தனை காலம் வரை அந்த உடலில் வாழ முடியும் ? பரமாத்மா அங்கு இருக்கும்வரை தான், ஆத்மா உடலில் இருக்கும்வரை. ஆத்மா அங்கு இருந்தாலுமே, பரமாத்மா அவனுக்கு அறிவாற்றலை வழங்காமல் இருந்தால், அவனால் செயல்பட முடியாது. மத்த: ஸ்ம்ருதிர் ஜ்ஞானம அபபோஹனம் ச (பகவத் கீதை 15.15). கடவுள் எனக்கு புத்தியை கொடுக்கிறார், "நீ இந்த பட்டனை தட்டு." பிறகு நான் அந்த பட்டனை அழுத்துகிறேன். ஆக இறுதியில் கிருஷ்ணர் தான் வேலை செய்துக் கொண்டிருக்கிறார். பயிற்சி பெறாத ஒருவனால் அதில் வேலை செய்ய முடியாது, ஏனென்றால் அவனிடம் அதற்கு தேவையான அறிவாற்றல் இல்லை. மற்றும் பயிற்சி பெற்ற ஒருவனால் அந்த வேலையை செய்ய முடியும். ஆக இப்படி நடந்துகொண்டிருக்கிறது. வாஸ்தவத்தில் எல்லாம் கிருஷ்ணர் தான். நீங்கள் செய்யும் ஆராய்ச்சி, பேசும் பேச்சு, அதுவும் கிருஷ்ணர் தான் செய்கிறார். கிருஷ்ணர் உங்களுக்கு புத்தியை... இந்த திறனை நீங்கள் கிருஷ்ணரிடம் வேண்டிக்கேட்டீர்கள். கிருஷ்ணரும் உங்களுக்கு அதை வழங்குகிறார். சில சமயங்களில், எதிர்பாராமலே ஒரு ஆராய்ச்சி வெற்றி அடைந்ததைப் பற்றி நீங்கள் கேட்டிருப்பீர்கள். நீங்கள் ஆராய்ச்சி செய்வதில் மிகவும் அலைக்கழிக்கப்பட்ட நிலையில் இருப்பதை பார்த்து, கிருஷ்ணர் , "சரி அப்படியே செய்." என்பார். எப்படியென்றால், தாயார் யஷோதா, கிருஷ்ணரை கயிற்றால் கட்ட முயன்றாள், ஆனால் அவளால் முடியவில்லை. ஆனால் கிருஷ்ணர் சம்மதித்தவுடன், அது சாத்தியம் ஆனது. அதுபோலவே, 'தற்செயலாக நடந்தது' என்றால், கிருஷ்ணர் உங்களுக்கு உதவிபுரிகிறார்: "சரி, நீ் இவ்வளவு கடுமையாக உழைக்கிறாய், இந்தா அதன் பலனை அனுபவி." அனைத்தும் கிருஷ்ணரே. மத்த: ஸர்வம் ப்ரவர்ததே. இது விளக்கப்பட்டிருக்கிறது. மத்த: ஸ்ம்ருதிர் ஜ்ஞானம அபபோஹனம் ச (பகவத் கீதை15.15). அனைத்தும் கிருஷ்ணரிடமிருந்து வருகிறது. ஸ்வரூப தாமோதர்: அவர்கள் கூறுகிறார்கள், "ஆனால் இந்த பரிசோதனையை செய்வதற்கான அந்த குறிப்பிட்ட வழிமுறையை கிருஷ்ணர் எனக்கு வழங்கவில்லையே." பிரபுபாதர்: ஆம், அவர்தான் உங்களுக்கு கொடுத்திருக்கிறார். இல்லையென்றால் நீங்கள் எப்படி அதை செய்கிறீர்கள்? நீங்கள் செய்வது அனைத்துமே கிருஷ்ணருடைய அனுக்கிரகத்தால் தான். மேலும் உங்களது ஆசை இன்னும் பலமாக இருந்தால், பிறகு அந்த ஆசையை பூர்த்தி செய்ய, கிருஷ்ணரும் உங்களுக்கு இன்னும் அதிக வசதிகளை அளிப்பார். கிருஷ்ணர் உங்களுக்கு வசதிகளை செய்துத் தருவார், உங்களுக்கு உதவி புரிவார், நீங்கள் விரும்பிய அளவிற்கு தான், அதற்கு மேல் அல்ல. யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ் ததைவ... எந்த அளவிற்கு நீங்கள் கிருஷ்ணரிடம் சரணடைகிறிர்களோ, அதே அளவிற்கு தான் தேவையான அறிவாற்றலையும் பெறுவீர்கள். நீங்கள் முழுமையாக சரணடைந்தால், பிறகு முழுமையான அறிவாற்றலை பெறுவீர்கள். பகவத்-கீதையில் இது கூறப்பட்டிருக்கிறது. யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாம்யஹம் (பகவத் கீதை 4.11).